டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 2 பெண்கள் உயிரிழப்பு - மகளின் வளைகாப்புக்கு சென்றபோது விபரீதம்..!

0 3196
டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 2 பெண்கள் உயிரிழப்பு - மகளின் வளைகாப்புக்கு சென்றபோது விபரீதம்..!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், தாய் உள்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

விருதுநகரை சேர்ந்த பழனிசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், பேத்திகள் உள்பட 11 பேர் மகேந்திர சைலோ காரில், மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக திருச்செந்தூர் அருகே உள்ள முள்ளிச்செவல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஒட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பின்பக்க இடதுபுற டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய கார் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், பழனிசாமியின் மனைவி சங்கரேஸ்வரி, அவரது உறவினர் மருதாயி ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இரண்டு சிறுமிகள் உள்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments