மின் கசிவால் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின..!

0 3024
மின் கசிவால் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின.

பெங்களூரு செல்லும் சாலையில் வடிவேல் என்பவரின் பட்டாசு கடையில் அதிகாலை 4 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறின.

பெரும் சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து பல அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர் மழையின்போது கடைக்குள் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்து, பட்டாசுகள் வெடித்து சிதறியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments