ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி பணம் திருடிய நபர் கைது!

0 3295

வேலூர் மாவட்டம் சித்தூரில் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 கார்டுகள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கைதான அந்த நபர் வடுங்கன்தாங்கள் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது.

சித்தூரில் அதிக அளவிலும், வேலூர், காட்பாடி, பாகாயம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments