செயின் பறிப்பில் ஈடுபட்ட சி.ஏ மாணவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்

0 3145
செயின் பறிப்பில் ஈடுபட்ட சி.ஏ மாணவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்

திருக்கோவிலூர் அருகே, செயின் பறிப்பில் ஈடுபட்ட சி.ஏ மாணவருக்கு மக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அருந்தங்குடி கிராமத்தில், மாடு மேய்த்துகொண்டிருந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்து இரண்டேகால் சவரன் தங்கச் செயினை பறித்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற அந்த இளைஞர் மும்பையில் மூன்றாம் ஆண்டு சி.ஏ படித்து வருவதும், கருத்து வேறுபாடு காரணமாகத் தந்தையுடன் பேச்சை நிறுத்தியதால் பணத்தேவைக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments