கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!

0 5163

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் கல்லூரி பேருந்தும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாணவ மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி 50 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை, 70 வயதான ஓட்டுநர் கண்ணன் ஓட்டி சென்றார்.

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது பேருந்தின் வேகம் அதிகரித்த நிலையில், பிரேக் அடித்தும் வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து வேகமெடுத்து பாய்ந்ததை கட்டுப்படுத்த இயலவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து, சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீதி மோதியதோடு, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 2 மாணவி, ஒரு மாணவன், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments