கடப்பாறையால் மகனை குத்தி கொலை செய்த தந்தை... மதுபோதையில் வாக்குவாதம் முற்றியதால் நிகழ்ந்த விபரீதம்..!

0 4131

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மதுபோதையில் வாக்குவாதம் முற்றியதால் பெற்ற மகனை கடப்பாறையால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மயில் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், மகளின் பிரசவத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயில் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

மயிலின் முதல் மனைவியின் மகன் சசிகுமார் மதுபோதையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கண்களில் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மதுபோதையில் இருந்த மயில் ஆத்திரத்தில் தூக்கிக் கொண்டிருந்த சிசிகுமாரின் கண்களில் கடப்பாறையால் குத்தியதில், துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments