படகு என்ஜின் பழுதாகி ஆழ்கடலில் தவித்த காரைக்கால் மீனவர்கள்.. பத்திரமாக மீட்ட கடலோர காவல்படை..!
கோடியக்கரை தென் கிழக்கே இந்திய எல்லையில் படகு பழுதாகி ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த காரைக்கால்மேட்டை சேர்ந்த 7 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 18-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
மூன்று நாட்களாகியும் கரை திரும்பாததால், மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின்பேரில் காரைக்கால் மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, என்ஜின் பழுதாகி மோசமான வானிலையால் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற கடலோர காவல் படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
Comments