பள்ளி விடுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலை முயற்சி!

0 4866

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பள்ளி விடுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி, வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த 4 மாணவிகள், 3 நாள் தொடர் விடுமுறையின் போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு தோழி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை மாணவிகள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோரை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் கேட்டபோது மாணவிகள் வீட்டிற்கு செல்லாதது தெரியவந்தது.

இந்த நிலையில் தோழி வீட்டிற்கு சென்றது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிந்துவிட்ட பயத்தில் நான்கு மாணவிகளும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments