மிளகாய் பொடியை தூவி, காரில் பைனான்சியரை கடத்திய மர்ம கும்பல்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

0 2997

நாமக்கல் மாவட்டம் பாதரையில் கெளதம் என்ற பைனான்சியரை மிளகாய் பொடி தூவி காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கௌதமை, வீட்டின் அருகே காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று, மிளகாய் பொடியை தூவி இருசக்கர வாகனத்துடன் காரில் கடத்திச்சென்றது.

கடத்தப்பட்ட கௌதமின் மனைவி திவ்யா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், கடத்தப்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த காலணி, உடைந்த மூக்குகண்ணாடி, ரத்தக்கறை மற்றும் சிறிய துண்டு ஆகிய தடயங்களை சேகரித்து, தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments