கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

0 2918

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகாரைச் சேர்ந்த அலோக் குமார் என்ற மாணவர் நடுவீரப்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சி.எஸ்.இ 2ஆம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாமல் அலோக் குமார் மட்டும் விடுதியிலேயே தங்கி உள்ளார்.

இந்நிலையில் அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட மாணவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் அலோக்குமார் தூக்கில் சடலமாகத் தொங்கியபடி இருப்பதை கண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments