3 மாதங்களில் இரண்டாவது முறையாகப் பிரதமரைச் சந்தித்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்

0 3358

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாகப் பிரதமரைச் சந்தித்த ஜெகன்மோகன், மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்தல் ஆகியன குறித்துக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

போலாவரத்தில் கோதாவரி ஆற்றில் அணை கட்டும் திட்டத்தின் மதிப்பீடு 55 ஆயிரத்து 549 கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் அதற்காக மத்திய அரசின் நிதியுதவியைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments