உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது!

0 3202

சென்னை ராயபுரத்தில் உணவகம் ஒன்றின் முன்பு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்ட கடை உரிமையாளர், ஊழியர்களை, கத்தி, இரும்பு ராடு கொண்டு தாக்கிய 2 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு அந்த உணவகத்தின் அருகே சிலர் பேசிக் கொண்டிருந்தாகவும் அவர்களில் ஒருவர் மதுபோதையில் உணவகம் முன் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சற்று தள்ளிச் செல்லுமாறு உணவக ஊழியர்கள் அவர்களிடம் கூறியபோது, போதையில் இருந்தவர் ஆபாசமாக திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட மதுபோதையில் இருந்தவர் சிலரை வரவழைத்து, உணவக ஊழியர்களையும், உரிமையாளரையும் கத்தி, இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தினார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,கைதானவர்கள் உட்பட தகராறில் ஈடுபட்ட அனைவரும் வழக்கறிஞர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments