இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை..!

0 7297
இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை

நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிக்க பெற்ற கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க, பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக லிங்குசாமி கடனாக பெற்றார்.

அப்போது, அவர் கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை பணமில்லாமல் திரும்பியதால், பி.வி.பி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில், லிங்குசாமி, அவரின் சகோதரருக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments