பொய் வழக்கு பதிவு செய்துவிடுவதாக மிரட்டி பணம் கேட்ட பெண் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

0 10420

நகைக்கடையில் பொய் வழக்கு பதிவு செய்துவிடுவதாக மிரட்டி 2 லட்சம் பணம் கேட்ட விவகாரத்தில் நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் ரோகினியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தியாகராய நகரில் உள்ள தனியார் நகைக்கடை மேலாளர் சிவகுமார் அளித்த புகாரில், திருட்டு வழக்கில் கைதான நேபாள பெண்ணிடம் தங்கள் கடை நகை உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் கடை பெயரை சேர்க்காமல் இருக்க 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதில், முகாந்திரம் இருந்ததால் 2 குற்றப்பிரிவு காவலர்களை தொடர்ந்து தற்போது குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் ரோகினியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments