புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!

0 3117

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி உயிரிழந்தார்.

காரையூர் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, தடை செய்யப்பட்ட பான் மசாலா-குட்கா புகையிலை பொருள்களைக் கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திடீரென சின்னதுரைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்ற நிலையில், செல்லும் வழியிலே சின்னதுரை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments