பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு..!

0 2648

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி விரட்டியடித்தனர்.

இரவில் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் சிலருடன் ஜம்மு காஷ்மீரின் நவுஷாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இதில் காயம் அடைந்த தபாரக் உசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளான்.

10 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments