புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி ஒரு பிரிவினர் போராட்டம்!

0 2792

புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் குண்டுராவை ஒரு பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் ஒரு பிரிவாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியத்தின் பதவி காலம் முடித்து விட்டதால், அவரை மாற்றம் செய்யக்கோரி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நிர்வாகிகளின் கூச்சல் குழப்பத்தால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இதையடுத்து, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர், கூட்டம் முடிந்து வெளியே வந்த மேலிட பொறுப்பாளர் குண்டுராவை வாகனத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments