படகு அடித்துச்செல்லப்பட்டதால் நீரில் சிக்கி தவித்த பொதுமக்கள்.. 70 பேரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்..!

0 2764
படகு அடித்துச்செல்லப்பட்டதால் நீரில் சிக்கி தவித்த பொதுமக்கள்.. 70 பேரை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்..!

ஒடிஷாவில், மகாநதியில் அதிக நீரோட்டத்தால் படகு அடித்துச் செல்லப்பட்டதில் சிக்கி தவித்த 70 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

கேந்திரபாரா மாவட்டத்தில் கடலுடன் ஆறு கடக்கும் முக துவாரம் அருகே அதிக நீரோட்டம் காரணமாக படகு அடித்து செல்லப்பட்ட நிலையில், அதில் பயணித்த 70 பேர் நீரில் சிக்கி தவித்தனர்.

வெள்ளப்பெருக்கால் படகு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக படகு இயக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெள்ள சூழலால், 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4.67 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments