இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை.. மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.!

0 2596

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அடுத்த 12 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சம்பா, பிலாஸ்பூர், மண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுகாயம் அடைந்தனர். காணாமல் போன 6 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கனமழையால் சேதமடைந்த 742 சாலைகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments