ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

0 2704
ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டங்களில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக அளித்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாக கூறி, எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த அனுமதி தரக்கோரி முத்து என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதன் விசாரணையில், எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது மிருக வதை தடைச்சட்டத்தை மீறிய செயல் என்பதால், போராட்டத்திற்கு அனுமதி தர முடியாது என நீதிபதி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments