காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பல் கைது

0 3702
காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பல் கைது

பீகார் மாநிலத்தில், காவல் உயர் அதிகாரி வீடருகேயே 8 மாதங்களாக போலி காவல் நிலையம் நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணவு விடுதியின் ஒரு பகுதியில் போலி காவல் நிலையத்தை அமைத்த அந்த 7 பேர் கும்பல், அங்கு புகாரளிக்க வருவோரிடமும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளிலும் மாமூல் வசூலித்து வந்துள்ளனர்.

மேலும் கிராமத்தினர் சிலரை தினமும் 500 ரூபாய் கூலிக்கு போலீசார் போல் வேடமிட்டு அங்கு பணியாற்றச்செய்துள்ளனர். போலீஸ் சீருடையில் வலம் வந்த அந்த கும்பலைச்சேர்ந்த இருவர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதை உண்மையான காவல்துறை அதிகாரி ஒருவர் கவனித்தபோது இவர்கள் குட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அதன் தலைவனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments