கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தி

0 2641

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தாம் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடக்கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும் என்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments