நீண்ட காலமாக வாடகைத் தொகையை செலுத்தாத வணிகர்கள்.. சுமார் 130 கடைகளுக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி..!

0 3434

சென்னை பாரிமுனை அருகே, நீண்ட காலமாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த சுமார் 130 வணிக கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை ரத்தன் பஜார் மற்றும் டி.என்.பி.எஸ் சாலையில், மாநகராட்சி சார்பில் சுமார் 400 கடைகள் வணிகர்களுக்கு வாடைகைக்கு விடப்பட்ட நிலையில், அதில் 130 கடைகள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 40 லட்சம் வாடகை தொகை நிலுவையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments