பண மோசடி புகாரில் சிக்கிய ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் மேலும் 2 இயக்குனர்கள் கைது..!

0 3585
பண மோசடி புகாரில் சிக்கிய ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் மேலும் 2 இயக்குனர்கள் கைது..!

பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி புகாரில் சிக்கிய ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் மேலும் 2 இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

136 இயக்குனர்களில் ஏற்கனவே மூன்று இயக்குனர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பல இயக்குனர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்பாக அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

இதில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களின் இயக்குனரான ஜெகன் என்பவரது வங்கிக் கணக்கில் 16 கோடி ரூபாயும், அரக்கோணம் கிளை இயக்குனரான சுப்புராஜ் என்பவரது வங்கிக் கணக்கில் 8 கோடி ரூபாயும் வரவு வைக்கப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த பணம் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்காததாலும் பொதுமக்களிடம் பணம் பெற்று ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி செய்த புகாரிலும் ஜெகன் மற்றும் சுப்புராஜை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments