பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

0 2735
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆயில் டேங்கர் லாரியும், பேருந்தும் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற ஆயில் டேங்கர் லாரி, பயணிகள் பேருந்து மீது மோதியது. முல்தான் எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர், தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக லாகூர் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments