"ரூட் தல" பிரச்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்...10 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு..!

0 3121

திருவள்ளூர் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் அரிவாள் வெட்டுடன் ஒரு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ரூட் தல தொடர்பாக வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

அதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் தக்கோளம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தினேஷ்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments