வீறுநடை போட்டு மீசையை முறுக்கி பாகிஸ்தான் வீரர்களை பார்த்து கர்ஜித்த இந்திய வீரர்கள்.. எல்லையில் மாஸ்..!

0 3370

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இருநாட்டு எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

எல்லையில் வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சிகளின் நிறைவில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியை பாரம்பரிய முறைப்படி இறக்கினர்.

மழை தூரலுக்கு மத்தியிலும் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments