சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழப்பு!

0 8504

சென்னை குரோம்பேட்டையில் பள்ளி சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். லட்சுமி பிரியா என்ற அந்த 11-ம் வகுப்பு மாணவி தோழியுடன் சைக்கிளில் வீடு திரும்பிகொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமி பிரியா பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார். பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு, சாலையோர ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்களால் விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY