கீழே விழுந்த மொபைல் போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம்.. போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது!

0 5262

சென்னை பெரியமேடு பகுதியில் கீழே விழுந்த மற்றொருவரின் செல்போனை மறைத்து வைத்தவரை எச்சரித்து உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை பெண்களோடு வந்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12ம் தேதி ரிப்பன் மாளிகை சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் செல்போன் கீழே விழுந்த நிலையில், அந்த செல்போனை அவருக்கு பின்னால் வந்த சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவர் எடுத்து மறைத்து வைத்திருக்கிறார்.

செல்போன் திருடியதை பார்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் லட்சுமண பெருமாள், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி உரியவரிடம் ஒப்படைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணப்பன், நேற்று 4 பெண்களுடன் வந்து உதவி ஆய்வாளரை அநாகரிமாக பேசியதோடு கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments