மாநில அரசுகள் ஏற்கனவே அளித்துவரும் இலவச மின்சாரத்தைத் தொடரலாம் என மத்திய அரசு விளக்கம்

0 3425

தற்போது இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள் அல்லது மானிய விலையில் மின்சாரம் பெறுபவர்கள் தொடர்ந்து பெறலாம் என்று மத்திய மின்துறைச் செயலர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், புதிய மின்சாரச் சட்டத்தில் ‘இலவச மின்சாரம்’ என்று குறிப்பிடப்படவில்லை என்ற போதும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அல்லது நுகர்வோருக்கு மானியம் வழங்கலாம், இந்தப் பிரிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புதிய மசோதா மானியங்கள் அல்லது இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முன்மொழிகிறது என்பது உண்மையல்ல என்றும் அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments