2 அடி தண்டவாள துண்டை தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி.. விபத்தை தவிர்த்த ஊழியர்கள்.!

0 3799

சேலம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகே, சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்த இரண்டு அடி தண்டவாள துண்டை ரயில்வே ஊழியர்கள் அகற்றியதால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாள பகுதிகளில் உள்ள ஜல்லிகளை சீர் செய்யும் இயந்திரம், மேட்டூர் மார்க்கம் வழியாக சேலம் ஜங்சன் நோக்கி வந்த நிலையில், ஓமலூர் ரயில்நிலையம் அருகே தொடர்ந்து செல்ல சிக்னல் கிடைக்காமல் இருந்துள்ளது.

தகவலின் பேரில் வந்த ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பகுதியில் ஆய்வு செய்ததில், ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளியில், ரயில் தண்டவாள மாற்றியில் , சிக்னல் வழங்கும் பகுதியில் இரண்டு அடிக்கு தண்டவாள துண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, தண்டவாள துண்டை அகற்றிய ஊழியர்கள், ரயில்வே போலீசாருக்கு இதுகுறித்து தெரிவித்தனர். அவ்வழியே பயணிகள் ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments