ஓமலூர் ரயில் நிலையம் அருகே ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிப்பு

0 2803

சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள மாற்றியில் 2 அடி தண்டவாள துண்டை வைத்து ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.

ஓமலூர் ரயில் நிலையத்திற்கு ரயில்வே தண்டவாள பகுதியில் உள்ள ஜல்லிகளை சீர் செய்யும் இயந்திரம் மேட்டூரில் இருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓமலூர் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன் அந்த ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ஓமலூர் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரயில்வே உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது தண்டவாள மாற்றியில் சுமார் 2அடி நீளமுள்ள தண்டவாள துண்டு இருப்பதைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments