போலி க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி பண மோசடி - இளைஞர் கைது..!

0 1852
போலி க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி பண மோசடி - இளைஞர் கைது..!

சென்னையில் போலி க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, க்யூ ஆர் கோடு ஸ்டிக்கரை பறிமுதல் செய்தனர்.

துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம் பேட்டையில் டிபன் கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவரது வங்கி கணக்கிற்கு, கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் க்யூ ஆர் கோடு மூலம் செலுத்தும் பணம் பரிமாற்றம் ஆகாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர், கடையில் வேறொரு க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டு போலீசில் புகாரளித்தார்.

விசாரணையில் கண்ணகி நகரை சேர்ந்த வெங்கடேஷ் க்யூ ஆர் கோடை ஒட்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments