வரும் ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை - அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தகவல்..!

0 2720
வரும் ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை - அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தகவல்..!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் பங்குகளில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு வர உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த இந்திய அரசு தீர்மானித்தது.

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் முயற்சி வெற்றி அடைந்ததை அடுத்து வரும் ஏப்ரல் மாதம் முதல் குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்குகளில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்பட உள்ளது.

படிப்படியாக அதிகரித்து, 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments