பட்டப்பகலில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை - சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

0 3632
பட்டப்பகலில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை - சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டப்பகலில் திமுக நிர்வாகி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டக்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். காலை பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் திருசிற்றம்பலம் நோக்கி சென்ற ஜெயக்குமாரை 3 பேர் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி வழிமறித்துள்ளது.

சுதாரித்துக் கொண்ட ஜெயக்குமார் தப்பியோட முயன்ற நிலையில், ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த ஜெயக்குமாரை பொதுமக்கள் மீட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக 3 பேரை பிடித்த ஆரோவில் போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY