ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எத்தனால் ஆலை இன்று திறப்பு.!

0 2288

ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்த எத்தனால் ஆலை, ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் வைக்கோலைப் பயன்படுத்தி 3 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் திறன்பெற்றதாகும்.

நாட்டில் உயிரி எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த ஆலை அமைய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

எத்தனால் ஆலை மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, வைக்கோலை வயல்களில் எரிப்பது தொடர்பான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments