பெண் ஒருவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த பாஜகவின் ஸ்ரீகாந்த் தியாகியின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் கொண்டு இடிப்பு .!

0 3932

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த பாஜகவின் கிசான் மோர்ச்சா சங்க உருப்பினரும், யுவ சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் ஆக்கிரமிப்புகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.

ஸ்ரீகாந்த் தியாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். இந்நிலையில், நொய்டாவில் ஸ்ரீகாந்த் தியாகியின் சட்டவிரோத கட்டடங்களை உத்தரப்பிரதேச காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்த 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments