இந்திய பெண்கள் A அணிக்கு பதக்க வாய்ப்பு

0 3423

செஸ் ஒலிம்பியாட் தொடரில் 10ஆவது சுற்றில், கஜகஸ்தானை வீழ்த்திய இந்திய பெண்கள் 'ஏ' அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால், அந்த அணிக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், 10-வது சுற்றில் இந்திய ஓபன் 'ஏ' அணி, ஈரான் அணியுடன் மோதியது. அப்பிரிவில், இந்திய வீரர்கள் விதித் சந்தோஷ், நாராயணன் ஆகியோர் வெற்றிவாகை சூடிய நிலையில், அர்ஜுன் விளையாடி போட்டி டிராவில் முடிந்தது.

இந்திய ஓபன் 'பி' பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரரை தோற்கடித்தார். தமிழக வீரர் அதிபன், சரின் நிகல் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தன. அதேபோல், இந்திய ஓபன் 'சி' பிரிவில், அபிமன்யூ சுலோவாகியா வீரரை தோற்கடித்தார். அப்பிரிவில், தமிழக வீரர் கார்திகேயன் முரளி, சூர்யா சேகர் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தன.

மேலும், மகளிர் 'ஏ' பிரிவில் இந்திய வீராங்கனைகள், கொனேரு ஹம்பி, தன்யா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் கஜகஸ்தான் வீராங்கனைகளை வீழ்த்தினர். தமிழக வீராங்கனை வைஷாலி விளையாடிய போட்டி சமனில் முடிந்தது.

மகளிர் 'பி' பிரிவில், இந்திய வீராங்கனைகள் பத்மினி, மேரி ஆன், திவ்யா தேஷ்முக் ஆகியோர் நெதர்லாந்து வீராங்கனைகளை வீழ்த்தினர். அதேபோல், மகளிர் 'சி' பிரிவில், தமிழக வீராங்கனை நந்திதா, பிரத்யூஷா ஆகியோர் சுவீடன் வீராங்கனைகளை தோற்கடித்தனர். ஈஷா, வர்ஷினி ஆகியோர் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தன



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments