சென்னையில் 2 நாளில் ஒரு சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2427

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் விருதுநகர், ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்கள், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்டு 9, 10, 11 ஆகிய நாட்களில் வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்டு 9 வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments