சீனாவின் கப்பலை வர விடாமல் தடுத்து நிறுத்தியது இலங்கை அரசு.!

0 14061

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கையை ஒட்டிய கடல்பகுதிக்கு வரும் 11 ஆம் தேதி வருகை தர இருந்த சீனாவின் உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

யுவான் வாங் என்ற பெயரில் ஆய்வு செய்ய கப்பலை அனுப்பியதாக சீனா கூறிய போதும் அது உளவுப்பார்க்க வந்ததாக இந்தியா இலங்கைக்கு ஆட்சேபம் எழுப்பியது.

சீனக் கப்பலின் வருகைக்கு காரணத்தை விளக்கும்படி இந்தியா இலங்கையிடம் கேள்வி எழுப்பி இருந்தது. இந்திய நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொழும்புவில் உள்ள சீன தூதரகத்திற்கு இந்த கப்பலின் வருகையை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கும் படி இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments