சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2059
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனித உரிமைகளுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளையும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதித்துறையின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments