வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலம் வழியாக காரில் செல்ல முயற்சி.. அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

0 3207

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலம் வழியாக செல்ல முயன்ற காருக்குள் மழை நீர் புகுந்ததால் அதில் பயணம் செய்த ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கோரக்கட்டா பகுதிக்கு செல்லும் சாலை வழியாக படேல் குமார் மற்றும் புட்டசித்தப்பா ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கனமழையால் மூழ்கிய தரைபாலம் மீது செல்ல முயன்றபோது காருக்குள் மழைநீர் புகுந்து கார் நிலைதடுமாறியது.

அதில் பயணம் செய்த படேல் குமார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments