இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது திடீரென முறிந்து விழுந்த பனைமரம்

0 9944

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் மீது சாலையோரம் உள்ள பனை மரம் முறிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மன்னார்குடி வஉசி ரோட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான வெங்கடாசலம் என்பவர் தற்போது கோட்டூர் அடுத்த களப்பால் ஓஎன்ஜிசி பிளாண்ட்டில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார்.

மேல மறவாக்காடு பகுதி அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த பனைமரம் ஒன்று முறிந்து பைக்கில் சென்ற வெங்கடாசலம் மீது விழுந்தது.

இதில் காயம் அடைந்த வெங்கடாச்சலத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments