உண்மையான சிவசேனா எந்த அணி என்பது குறித்து முடிவெடுக்க வேண்டாம் - உச்சநீதிமன்றம்

0 3186
உண்மையான சிவசேனா எந்த அணி என்பது குறித்து முடிவெடுக்க வேண்டாம் - உச்சநீதிமன்றம்

உண்மையான சிவசேனா எந்த அணி என்பது குறித்தும், தங்கள் தரப்பிற்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்கக்கோரிய மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மனு மீதும், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மகாராஷ்டிர முதலமைச்சர் தாக்கல் செய்த மனுவிற்கு எதிராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்தார்.

இதன் விசாரணையில், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா? என்பது குறித்து திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments