தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்..!

0 3861
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட்..!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கு, அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மதுரை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய தினம் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments