பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி அய்மான் அல் ஜவாஹிரி கொலை..!

0 3872
பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி அய்மான் அல் ஜவாஹிரி கொலை..!

அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொலை செய்ய பாகிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட பல்வேறு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட 71 வயதான அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, டிரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த ட்ரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments