தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 50 பேர் பாதிப்பு.!

0 1847

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 50 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனகாபல்லே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையின் ஆடை உற்பத்தி பிரிவில் இருந்து திடீரென கசிந்த விஷவாயு காரணமாக ஆலையில் பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

தொடர்ந்து, தொழிற்சாலையின் வளாகத்தில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments