தூளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுகி பலி

0 2546
தூளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் சேலை இறுகி பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலையில் கட்டப்பட்ட தூளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன், கழுத்தில் சேலை இருகி உயிரிழந்ததான்.

சேவியர் - அருளரசி தம்பதிக்கு லெனின் கிரிஸ், சந்தோஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக புறப்பட்ட தம்பதி, இரு மகன்களையும் விட்டுச் சென்றால் சண்டையிட்டு கொள்வார்கள் என்று எண்ணி மூத்த மகன் லெனின் கிரிஷை வீட்டிலேயே விட்டுவிட்டு, டிவி பார்க்குமாறு கூறிவிட்டு இளைய மகனை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மாலை அவர்கள் வீடு திரும்பிய போது சிறுவன் லெனின், வீட்டின் பின்பக்கம் வேப்ப மரத்தில் உள்ள தூளி, கழுத்தில் மாட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெற்றோர் வெளியூர் செல்லும் போது குழந்தைகளை தனியாக விட்டுசெலல்லாமல் தங்களுடன் அழைத்து செல்லவேண்டும் இதுபோல் அஜாக்கிரதையாக விட்டு சென்றால் குழந்தைகளின் விளையாட்டு விபரிதமாகிடும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments