75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு தபால் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தேசியக்கொடி விற்பனை

0 1696
75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு தபால் துறையின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தேசியக்கொடி விற்பனை

நாட்டின் 75 வது விடுதலை பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என்ற இயக்கத்தின் அடிப்படையில், தபால் நிலையங்கள் மூலம் தேசியக் கொடியை விற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் துறையின் ePost office என்ற இணையதளத்தின் மூலம் மக்கள் தேசியக்கொடியை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கலாம். ஒரு தேசியக்கொடியின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜிஎஸ்டி வரிகள் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் இந்த விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments