4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

0 28266
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் விடுத்த செய்திக்குறிப்பில், இன்று நீலகிரி, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை, நீலகிரி, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழையும், வரும் 4ஆம் தேதியன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments